புத்தகங்கள்

புத்தகங்கள் ஒரு போதும் காகித பெட்டகங்கள் அல்ல, அவை அறிவு பெட்டகங்கள். உலகையே மாற்றும் திறத்தை தன்னுள் கொண்டவை. மூலதனம் என்னும் ஒற்றை நூல்தான் ஒட்டுமொத்த உலகின் தலையெழுத்தையே மாற்றியது. ஒரு நல்ல புத்தகம் திறந்து கொண்டால் ஒரு இருண்ட உலகம் விடிகிறது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்க நகர்விலும் எதிர்காலத்திற்குள் எட்டு வைக்கிறோம். வரலாற்று, இலக்கிய காலம் தொட்டு புத்தகங்கள் வரலாற்று பதிவுகளாகவும், நிகழ் காலத்தின் கண்ணாடியாகவும் திகழ்கின்றன. சமூகம், பொருளாதாரம், அரசியல் என எந்த பதிவாயினும் எதோ ஒருவரின் அனுபவத்தில் விளைந்து பலருக்கு வழி காட்டியாய் அமைகிறது. புத்தகங்களை பதிப்பிப்பதில் பிரியஜீவி மகிழ்ச்சியடைகிறது. நல்ல புத்தகங்களை என்றும் வரவேற்கிறது.

Friday, August 14, 2009

பீரியஜீவி - யின் வெளீயீடுகள்

சென்ற ஆண்டின் (2008) இறுதியில் வெளியிடப்பட்ட எங்கள் பதிப்பகத்தின் முதல் நூல் :- கவிஞர் பா.இனியவனின் "எனை ஒவ்வொருநாளும் செதுக்குகிறாய்"- என்னும் கவிதை தொகுப்பு.


முழுக்க காதலின் மெல்லிய உணர்வுகளின் பதிவுகளாய் திகழும் இனியவனின் கவிதைகள் வெளியான சில நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.


காதலைபாடாத தேசமும் இல்லை, காதலைபாடாத உள்ளமும் இல்லை...


இதோ உங்களின் பார்வைக்கு "எனை ஒவ்வொரு நாளும் செதுக்குகிறாயின் சில வரிகள்:-

எத்தனையோ பெண்கள்
அழகாய் இருக்கலாம்
ஆனால் நீதான் என்னை
அழகாகியவள்...

என்னால் சொல்ல முடியாத
எவ்வளவோ காதலை
நீ சாதாரணமாய் சொல்லி விடுகிறாய்
உன் ஒரு பார்வையில்...

உன்னை காதலிக்க துவங்கிய பிறகு
பொய் பேச கூடாதென்றால்
பொய் பேசாமல்
எப்படித்தான் காதலிப்பது .






No comments:

Post a Comment